நாளை மறுநாள் தமிழகம் வரும் பிரதமர் மோடி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பிரதமர் மோடி வரும் 30-ம் தேதி  3 நாள் பயணமாக தமிழ்நாடு வர உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நாளை மறுநாள் திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வரும் மோடி, 31 முதல் ஜுன் 1-ம் தேதி வரை விவேகானந்தர் தியான மண்டபத்தில் தியானம் செய்ய உள்ளதாகத் தெரிகிறது. 1-ம் தேதி தியானத்தை முடித்துக் கொண்டு அன்று மாலை கன்னியாகுமரியில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் பிரதமர் மோடி அங்கிருந்து டெல்லி செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. 7 கட்ட மக்களவைத் தேர்தலில் இறுதிகட்ட தேர்தல் வரும் 1-ம் தேதி நடைபெற உள்ளது. அதில் பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

Night
Day