நீதிபதி உத்தரவையடுத்து நா.த.க ஒருங்கிணைப்பாளர் சீமான் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்

எழுத்தின் அளவு: அ+ அ-

திருச்சி சரக டிஐஜி வருண்குமார் தொடர்ந்த வழக்கு விசாரணையில் நீதிபதி உத்தரவையடுத்து நா.த.க ஒருங்கிணைப்பாளர் சீமான் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.

திருச்சி சரக டிஐஜி வருண்குமார் மற்றும் அவரது மனைவியும் ஐபிஎஸ் அதிகாரியுமான வந்திதா பாண்டே உள்ளிட்ட அவரது குடும்பத்தினரை பற்றி நாம் தமிழர் கட்சியினர் சமூக வலைதளங்களில் அவதூறாக பேசியதாக டிஐஜி வருண் குமார் திருச்சி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கு மீதான விசாரணை திருச்சி குற்றவியல் நீதிமன்றம் 4ல் நடைபெற்று வருகிறது. நீதிமன்றத்தில் சீமான் ஆஜராகாத நிலையில், ஒரு நாள் கெடு விதித்து நீதிபதி பாலாஜி உத்தரவிட்டார். இதையடுத்து திருச்சி நீதிமன்றத்தில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று நேரில் ஆஜரானார்.

Night
Day