நீலகிரியில் குறையும் அணைகளின் நீர்மட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நீலகிரி மாவட்டத்தில் அணைகளின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருவதால் விரைவில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

பருவமழை குறைவு காரணமாக நீலகிரியில் உள்ள அவலாஞ்சி, எமரால்டு உள்ளிட்ட 12 அணைகளின் நீர்மட்டம் சரிந்து வருகிறது. இதனால் மின் உற்பத்தி பாதிக்கப்படுவதுடன், குடிநீர் விநியோகமும் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், எமரால்டு மற்றும் அவலாஞ்சி அணைகளை இணைக்கும் சுருக்கி பாலமும் தண்ணீரின்றி வறண்டு காட்சியளிப்பதால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். 

Night
Day