நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் 2 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. குறிப்பாக கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கனமழை வெளுத்து வாங்கியது. இந்நிலையில், இந்த இரண்டு மாவட்டங்களும் மீண்டும் கனமழைக்கான மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளா மற்றும் ஆந்திர மாநிலங்களில் பலத்த தரைக்காற்று வீசக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 

Night
Day