நீலகிரி அருகே யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே யானை தாக்கி ஒருவர்  உயரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.  கோத்தகிரி அருகே  கெங்கரை பகுதியில் கடந்த சில நாட்களாக யானைகள் கூட்டம் சுற்றி வருகின்றன. இந்நிலையில் கெங்கரை - குராக்கரை பகுதியில் வசித்து வரும் ரமேஷ் என்கிற  விஜயராஜா  என்பவர் நேற்று இரவு தனது வீட்டு அருகில் நடந்து சென்ற போது திடீரென யானை தாக்கியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  இதேபோல், கடந்த 10 நாட்களுக்கு முன்பு இதே பகுதியில் யானை மிதித்து பெண் பலியான நிலையில். இந்த இரண்டு சம்பவம் குறித்தும் வனத்றையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Night
Day