நீலகிரி: அரசுப்பேருந்தை வழிமறித்த காட்டு யானைக்கூட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே காட்டுயானை கூட்டம் பேருந்தை வழிமறித்ததால் பயணிகள் அச்சமடைந்தனர். கோவை செல்லும் 3வது வழித்தடமான மஞ்சூர் - கெத்தை சாலையில் அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, சாலைக்கு வந்த காட்டுயானை கூட்டம் பேருந்தை வழிமறிக்கும் வகையில் சுற்றித் திரிந்தன. நீண்ட நேரத்திற்கு பிறகு யானைகள் கூட்டம் வனப்பகுதிக்குள் சென்ற பின், பேருந்து புறப்பட்டது. 

Night
Day