நீலகிரி: குடியிருப்பு பகுதியில் உலா வரும் சிறுத்தையால் பொதுமக்‍கள் அச்சம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள ஆள்வார்பேட்டை பகுதியில் சிறுத்தை ஒன்று உலா வரும் கண்காணிப்பு கேமரா பதிவு காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அண்மைக்‍ காலமாக சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. தண்ணீர் மற்றும் உணவு தேடி குடியிருப்பு பகுதிக்‍குள் சிறுத்தை உலா வருவதால், பொதுமக்‍கள் அச்சமடைந்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்‍கு முன்பு புரூக்‍லேண்ட்ஸ் பகுதியில் 6 பேரை தாக்‍கிய இந்த சிறுத்தை தற்போது ஆள்வார்பேட்டை பகுதியில் சாலையில் சுற்றித் திரியும் காட்சி வெளியாகியுள்ளதால், மக்‍கள், அச்சத்தில் வீடுகளில் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. உடனடியாக சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்‍க அப்பகுதி மக்‍கள் வனத்துறைக்‍கு கோரிக்‍கை விடுத்துள்ளனர்.

Night
Day