நீலகிரி: கெத்தை மலைப்பாதையில் குட்டியுடன் உலாவரும் யானைக்கூட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் - கெத்தை மலைப்பாதையில் குட்டியுடன் உலா வந்த யானைக்கூட்டம் அரசு பேருந்தை வழி மறித்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மஞ்சூர் - கெத்தை மலைப்பாதையில், இன்று காலை வனப்பகுதியில் இருந்து கூட்டமாக வெளியேறிய காட்டு யானைகள் குட்டியுடன் அரசு பேருந்தை வழிமறித்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பயணிகள் ஒரு மணி நேரம் காத்திருந்த பின்னர் யானைகள் சாலை ஒரமாக சென்றதை அடுத்து அரசு பேருந்து மற்றும் வாகனங்கள் புறப்பட்டு சென்றன. இதையடுத்து யானைகளை வனத்துறையினர் அடர் வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

varient
Night
Day