நீலகிரி: சாலையோர வியாபாரிகளுக்கு தள்ளு வண்டிகளை உடனே வழங்க கோரிக்கை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நீலகிரி மாவட்டம் பந்தலூர் நெல்லியாளம் நகராட்சியில் சாலையோர வியாபாரிகளுக்கு தள்ளு வண்டிகளை உடனே வழங்க வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர். தமிழகம் முழுவதும் சாலையோர வியாபாரிகளுக்கான ஆதரவு திட்டத்தின் கீழ் தள்ளுவண்டிகள் வழங்கப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர் போன்ற பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கான ஆதரவு திட்டத்தின் கீழ் தள்ளுவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பந்தலூர் நெல்லியாளம் நகராட்சியில் நீண்ட நாட்களாக வைக்கப்பட்டுள்ள தள்ளுவண்டிகள் சேதமடைய தொடங்கியுள்ளன. எனவே நகராட்சி அதிகாரிகள் சாலையோர வியாபாரிகளுக்காக கொண்டு வரப்பட்ட தள்ளு வண்டிகளை உடனடியாக வழங்க கோரிக்கை விடுத்தனர்.

Night
Day