நீலகிரி: சுற்றுலா சென்ற இளைஞர் 700 அடி பள்ளத்தில் விழுந்து உயிரிழப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே சுற்றுலா சென்ற இளைஞர் 700 அடி பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனியை சேர்ந்த 10 இளைஞர்கள் குன்னூர் செங்குட்ராயன் மலைக்கு சுற்றுலா சென்றனர். அப்போது மலையேறிக் கொண்டிருந்த இளைஞர்களை திடீரென தேனீக்கள் தாக்கியது. இதில் இளைஞர்கள் நாலாபுறமும் சிதறி ஓடிய நிலையில் பிரவீன் என்ற இளைஞர் 700 அடி பள்ளத்துக்குள் தவறி விழுந்து உயிரிழந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மற்ற இளைஞர்கள் தீயணைப்புத்துறைக்கு புகார் அளித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த வீரர்கள் இளைஞரின் உடலை போராடி மீட்டனர். 

Night
Day