நீலகிரி: வளர்ப்பு நாயை சிறுத்தை வேட்டையாடி சென்ற அதிர்ச்சி காட்சிகள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே வளர்ப்பு நாயை சிறுத்தை வேட்டையாடி சென்ற அதிர்ச்சி காட்சிகள் வெளியாகியுள்ளன. கன்னேரிமுக்கு பகுதியில் வசித்து வரும் தாவித் பாக்கியராஜ் என்பவரது வீட்டின் அருகே இரவு நேரத்தில் உலா வந்த சிறுத்தை வீட்டில் வளர்க்கப்படும் வளர்ப்பு நாயை வேட்டையாடி சென்றது. இந்த காட்சி அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள நிலையில் அப்பகுதி மக்கள் பெரிதும் அச்சமடைந்துள்ளனர். மேலும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டுமென வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Night
Day