நீலகிரி: வெண்ணிற ஆடை போர்த்தியது போல காட்சியளித்த மலைப்பகுதி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நீலகிரி மாவட்டம் நாடுகாணியில் மலைகளுக்கு வெண்ணிற ஆடை போர்த்தியது போல காட்சியளிக்கும் பனிமூட்டத்தை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். கூடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வழக்கத்தை விட அதிக பனிமூட்டம்   காணப்படுகிறது. கடுங்குளிரால் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் தகரசெட் பகுதியில் நிலவிய பனிமூட்டம், மலைகளுக்கு வெண்ணிற ஆடை போர்த்தியது போல காட்சியளித்தது. இதனை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள், புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். 

Night
Day