நீலகிரி: 3வது நாளாக வனப்பகுதியில் எரிந்து வரும் காட்டுத் தீ

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

குன்னூர் அருகே வனப்பகுதியில் 3வது நாளாக காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது. 
வண்டிசோலை பராஸ்ட் டேல் என்ற பகுதியில் தனியாருக்கு சொந்தமான தேயிலை தோட்டத்தில் இருந்த காய்ந்த சருகுகளுக்கு தீ வைக்கப்பட்டது. இந்த தீ அருகிலுள்ள வனப்பகுதிகளுக்கும் பரவியது. இதில் ஆயிரக்கணக்கான மூலிகை மரங்கள் கருகின. இதுகுறித்து பேசிய நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா, காட்டுத் தீயை அணைக்க, தேவைப்பட்டால் ஹெலிகாப்டர் பயன்படுத்தப்படும் என் தெரிவித்தார். 

Night
Day