நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த 5 தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த 5 தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர். 

இலங்கை கடற்படையினரின் பல்வேறு அச்சுறுத்தல்களால் தமிழக மீனவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில், நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த 5 தமிழக மீனவர்களை, எல்லை தாண்டி சென்று மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். ஒரு படகையும் பறிமுதல் செய்து ஊர்க்காவல்துறை துறைமுகத்திற்கு அழைத்து சென்றனர். சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

Night
Day