நெல்லையில் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியில் கோஷ்டி மோதல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாடாளுமன்ற தேர்தலுக்‍கு 5 நாட்களே உள்ள நிலையில், திமுக-காங்கிரஸ் கூட்டணியில் கோஷ்டி பூசல் அதிகரித்து வருகிறது. நெல்லை ஏர்வாடியில் காங்கிரஸ் பிரமுகரை திமுக நிர்வாகி தாக்க முயன்ற வீடியோ வைரலாகி வருகிறது.

நெல்லை மாவட்டம் ஏர்வாடி பேரூராட்சியில் சனிக்‍கிழமையன்று நெல்லை நாடாளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸ், ஏர்வாடி பேரூராட்சி பகுதியில் வாக்கு சேகரிக்க சென்றார். அதில் ஏர்வாடி பேரூராட்சி திமுக நகர செயலாளர் அயூப் கானுக்கு எதிரான திமுக கோஷ்டியினருடன் எம்எல்ஏ ரூபி மனோகரின் ஆதரவாளரான காங்கிரஸ் நிர்வாகி ரீமா பைசல் இணைந்து தனி குழுவாக சென்று ஓட்டு கேட்டுள்ளார். இதைக்‍ கண்டு ஆத்திரமடைந்த திமுக நகர செயலாளர் அயூப் கான் ரீமா பைசல் நடத்தி வரும் செல்போன் கடைக்கு சென்று வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது இருவரிடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்படும் சூழல் உருவானது. தரக்‍குறைவான வார்த்தைகளால் திட்டிய திமுக நகரச் செயலாளர் அயூப்கானை படம் எடுத்து ரீமா பைசல் தரப்பினர் வலைத்தளங்களில் பதிவிட்ட வீடியோ வைரல் ஆகி வருகிறது. 

Night
Day