நெல்லை மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் நீராட அனுமதி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஜெயா பிளஸ் செய்தி எதிரொலியால், நெல்லை மணிமுத்தாறு அருவியில் இன்று முதல் சுற்றுலா பயணிகள் நீராட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அம்பாசமுத்திரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள மணிமுத்தாறு அருவியில் கடந்த டிசம்பர் மாதம் பெய்த கனமழையால், மக்கள் குளிக்கும் தடாகம், தடுப்பு கம்பிகள் உள்ளிட்டவை சேதமாகின. தொடர்ந்து வனத்துறை சார்பில் கான்கிரீட் அமைப்பது உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதனிடையே நேற்று முன்தினம் ஜெயா பிளஸ் தொலைக்காட்சியில் மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் நீராட அனுமதி வழங்க வேண்டுமென செய்தி வெளியானது. தொடர்ந்து இன்று முதல் வனத்துறை அனுமதி வழங்கியதை அடுத்து மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர்.

varient
Night
Day