நெல்லை - ஆ.ராசாவைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

செக்கிழுத்த செம்மல் வ.உ. சிதம்பரனார் குறித்து இழிவாக பேசிய, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவை கண்டித்து, தமிழ்நாடு சைவ வேளாளர் சங்கத்தினர் நெல்லையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, செக்கிழுத்த செம்மல் வ.உ. சிதம்பனார் குறித்து, உண்மைக்கு புறம்பாகவும், அவமரியாதையாகவும் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தநிலையில், ஆ.ராசாவை கண்டித்து, நெல்லையில் தமிழ்நாடு சைவ வேளாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ராசா மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனில், வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக மிகப்பெரிய இழப்பை சந்திக்க நேரிடும் என ஆர்ப்பாட்டத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

Night
Day