நெல்லை : ஆர்டர் செய்த உணவை வழங்குவதில் தனியார் உணவகம் தாமதம் - நஷ்டஈடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆர்டர் செய்த உணவை வழங்குவதில் தனியார் உணவகம் அஜாக்கிரதையாக செயல்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் 7 ஆயிரம் ரூபாய் நஷ்டஈடு வழங்க நெல்லை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

பூந்துறையைச் சேர்ந்த சிவசுப்பிரமணியன், நாகர்கோவிலில் உள்ள தனியார் உணவகத்தில் இரவு உணவுக்கு ஆர்டர் செய்துவிட்டு 484 ரூபாய் செலுத்தி ரசீது பெற்றுள்ளார். ஆனால் நீண்டநேரமாக உணவு வழங்கப்படாததால் இதுகுறித்து கேட்டபோது வேறு ஒருவருக்கு அந்த உணவை வழங்கி விட்டதாகவும், வேறு ஒரு நாளில் அந்த உணவை பெற்றுச் செல்லலாம் என்றும் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சிவசுப்பிரமணியன் அளித்த புகாரில் நெல்லை நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையம் விசாரணை செய்து, தனியார் உணவகம் சிவசுப்பிரமணியனுக்கு 7 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட்டது. 

varient
Night
Day