நெல்லை: அரசுப் பேருந்து மீது ஆட்டோ மோதி விபத்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் அரசு பேருந்து மீது ஆட்டோ மோதி விபத்துக்குள்ளான கண்காணிப்பு கேமரா காட்சி வெளியாகி உள்ளது. தளபதி சமுத்திரம் அருகே உள்ள மேட்டு காலனி பகுதியை சேர்ந்தவர் இசைவாணன். இவர் நேற்று சவாரி ஏற்றுவதற்காக வள்ளியூர் நோக்கி சென்றுள்ளார். சித்ரா திரையரங்கம் அருகே வேகமாக சென்றபோது, எதிரே வந்த அரசுப்பேருந்து மீது ஆட்டோ மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த இசைவாணன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். போலீசாரின் விசாரணையில் இசைவாணன் மதுபோதையில் ஆட்டோவை ஓட்டி சென்றது தெரியவந்துள்ளது.

varient
Night
Day