நெல்லை: கத்தரிக்கோல் குத்தி, சிறுவனின் இருதயத்தில் ஏற்பட்ட காயம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தென்காசியில் இதயத்தில் ஏற்பட்ட கத்திரிக்கோல் காயத்துக்கு அரைமணி நேரத்தில் அறுவை சிகிச்சை செய்து சிறுவன் உயிரை அரசு மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர். தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தைச் சேர்ந்த 11 வயது சிறுவனும் அவரது சகோதரனும் விளையாடிபோது, கத்திரிக்கோலால் இருதயத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்றபின், நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிறுவன் சேர்க்கப்பட்டான். அங்கு சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு காப்பாற்றப்பட்டான்.

Night
Day