நெல்லை: களக்காடு தலையணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நெல்லை மாவட்டம் தலையணையில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. நெல்லையில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வருவதால் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் நீர் நிலைகளுக்கு சென்று வருகிறனர். அந்த வகையில், பாபநாசம், களக்காடு தலையணை பகுதிகளில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதி காணப்பட்டது. தலையணை பகுதியில் குளிப்பதற்கு தடைவிதிக்கப்பட்டும் சுற்றுலா பயணிகள் ஆபத்தை உணராமல் ஆனந்த குளியலிட்டனர்.

Night
Day