நெல்லை: குடியிருப்பு பகுதிக்குள் உலா வரும் கரடி - பொதுமக்கள் அச்சம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே இரவு நேரத்தில் கரடி உலா வருவதால் பொதுமக்கள் அச்சத்திற்குள்ளாகி உள்ளனர். அம்பாசமுத்திரம் அருகே உள்ள பாபநாசம் மேற்குத் தொடர்சி மலை பகுதிகளில் இருந்து யானை, சிறுத்தை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் தொடர்ச்சியாக குடியிருப்பு பகுதிகளுக்குள் வருகின்றன. இந்நிலையில், பாபநாசம் அருகே உள்ள அனவன்குடியிருப்பு பகுதியில் உள்ள வீட்டிற்குள் கரடி ஒன்று புகுந்து அங்குமிங்கும் உலாவியது. இப்பகுதியில் அடிக்கடி கரடிகள் உலா வருவதால் பொதுமக்கள் உடனடியாக கரடிகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டுமென வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 

Night
Day