நெல்லை: சுங்க கட்டணம் செலுத்தாத அரசு பேருந்திற்கு அனுமதி மறுப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் சுங்க கட்டணம் செலுத்த ஃபாஸ்ட் டேக்கில் பணம் இல்லாததால், அரசு பேருந்து திருப்பி அனுப்பப்பட்ட அவலம் அரங்கேறியுள்ளது.  நெல்லை மாவட்டம் வள்ளியூரில் இருந்து திருநெல்வேலிக்கு பயணிகளுடன் அரசு பேருந்து புறப்பட்டது. நாங்குநேரி சுங்கச் சாவடிக்கு பேருந்து வந்தபோது, சுங்க கட்டணம் செலுத்த பாஸ்ட் டாக்கில் பணம் இல்லாததால், சுங்கச் சாவடி ஊழியர்கள் பேருந்தை அனுமதிக்க மறுத்தனர். பின்னர் பேருந்தை அவர்கள் திருப்பி அனுப்பி வைத்தனர். இதனையடுத்து பேருந்து சுமார் 7 கிலோ மீட்டர் சுற்றி சென்றது.

Night
Day