நெல்லை: தாமிரபரணி ஆற்றங்கரையோரம் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நெல்லை தாமிரபரணி ஆற்றங்கரையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை பொதுப்பணித் துறையினர் அகற்றினர்.

கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு காரணமாக கரையோரப் பகுதிகளில் வசித்த மக்கள் மிகப்பெரிய சிரமத்திற்கு ஆளாகினர். இதையடுத்து தாமிரபரணி நதிக்கரையோரம் ஆக்கிரமித்துள்ள இடங்களை பொதுப்பணித்துறையினர் தொடர்ந்து அகற்றி வருகின்றனர். அதன்படி குறுக்குத் துறை அருகே உள்ள கருப்பந்துறை அழியாபதிஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான இடத்தை சிலர் ஆக்கிரமித்துள்ளதாக அறநிலையதுறைக்கு தகவல் கிடைத்தது. தொடர்ந்து, அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில், பொதுப்பணித்துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

Night
Day