நெல்லை: நீதிமன்ற உத்தரவை திமுகவினர் காற்றில் பறக்கவிட்டுள்ளதாக குற்றச்சாட்டு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உதயநிதி வருகையையொட்டி, நெல்லை மாநகராட்சி பகுதிகளில், நீதிமன்ற உத்தரவை மீறி பல இடங்களில் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதால் மக்கள் அவதி அடைந்துள்ளனர். நெல்லை மாநகர பகுதிக்கு உதயநிதி நாளை செல்கிறார். அவரை வரவேற்கும் வகையில், நெல்லை மாநகர பகுதி முழுவதுமே திமுகவினர் பிளக்ஸ் போர்டுகளையும் சாலையின் இரு புறங்களிலும் அமைத்துள்ளனர். சாலையின் நடுவில் திமுக கொடியையும் கட்டியுள்ளனர். பிளக்ஸ் பேனர் வைக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், அந்த உத்தரவை திமுகவினர் காற்றில் பறக்கவிட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Night
Day