நெல்லை: புத்தக கண்காட்சியில் 10 வயது சிறுவனின் படைப்பு வெளியீடு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நெல்லை மாநகராட்சியில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் 10 வயது பள்ளி மாணவனின் "மனிதநேயம் வெல்லும்" என்ற சிறார் புத்தகம் வெளியிடப்பட்டது.  நெல்லை டவுன் மாநகராட்சி எதிரே உள்ள வர்த்தக மைய கட்டிடத்தில் பொருநை புத்தகத் திருவிழா கடந்த 3-ம் தேதி தொடங்கப்பட்டது. இத்திருவிழாவில் இளம் எழுத்தாளர் கவின் விக்னேஷ் எழுதிய "மனிதநேயம் வெல்லும்" என்ற முதல் குழந்தைகளுக்கான புத்தகம் வெளியிடப்பட்டது. அண்மையில் பெருவெள்ளத்தில் சிக்‍கித் தவித்த 800க்கும் மேற்பட்ட ரயில் பயணிகளை, அருகில் இருந்த கிராம மக்கள் எந்தவொரு எதிர்பார்ப்புமின்றி மனிதநேயத்துடன் அவர்களுக்கு உதவினர். இதன் பின்னணியில் எழுதப்பட்ட இந்தப் புத்தகமானது புத்தக கண்காட்சியில் வெளியிடப்பட்டு வரவேற்பை பெற்றுள்ளது.

varient
Night
Day