நெல்லை: வீட்டுமனை பட்டா கோரி வீடுகளில் கருப்புக்‍கொடி கட்டி பொதுமக்‍கள் தர்ணா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வீட்டு மனை பட்டா வழங்காத தமிழக அரசைக்‍ கண்டித்து நெல்லை மாநகர் பேட்டை பகுதியைச் சேர்ந்த மக்‍கள் வீடுகளில் கருப்புக்‍கொடி ஏற்றி தர்ணா போராட்டம் நடத்தினர். பேட்டை பகுதியில் உள்ள தங்கம்மன் கோவில் இடத்தில் வசிக்‍கும் மக்‍கள் வீட்டுமனை பட்டா கேட்டு அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்‍கை எடுக்‍கவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து, பட்டா வழங்காத தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து அப்பகுதியில் தங்கள் வீடுகளிலும், தெருக்‍களிலும் கருப்புக்‍ கொடி ஏற்றி தர்ணாவில் ஈடுபட்டனர். தங்களின் கோரிக்‍கையை நிறைவேற்றாவிட்டால், வாக்காளர் அடையாள அட்டையை திரும்ப ஒப்படைத்து தொடர் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அவர்கள் எச்சரித்தனர்.

Night
Day