பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு களைகட்டிய ஆட்டுச்சந்தை - ஆடுகளின் விலை கடுமையாக உயர்வு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகம் முழுவதும் வரும் 17ஆம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு, ராமநாதபுரத்தில் நடைபெற்ற சிறப்பு ஆட்டுச் சந்தையில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. வழக்கத்தை விட ஆடுகளின் விலை கடுமையாக உயர்ந்திருந்தன. வழக்கமாக 15 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்ட ஆடுகள் 20 ஆயிரம் ரூபாய்க்கும், 20 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்ட ஆடுகள் 25 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது.  இன்று காலை 6 மணிக்கு துவங்கிய ஆட்டுச் சந்தையில் ஒரு மணி நேரத்தில் 5 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Night
Day