படகு பழுதால் மாலத்தீவு அருகே நடுக்கடலில் சிக்கி தவிக்கும் தூத்துக்குடி மீனவர்கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளத்தில் இருந்து கடலுக்கு சென்ற மீனவர்கள் படகு பழுதால் மாலத்தீவு அருகே நடுக்கடலில் சிக்கி தவித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. தருவைக்குளத்தில் இருந்து கடந்த 28-ஆம் தேதி ஜெயராஜ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 10 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றுள்ளனர். இந்த நிலையில்  மாலத்தீவுக்கு சொந்தமான மினிக்காய் தீவு அருகே படகு பழுதாகியுள்ளது. இதுகுறித்து தருவைக்குளம் மீனவர் சங்க பிரதிநிதிகளுக்கு மீனவர்கள் தகவல் அளித்த நிலையில், இந்திய கடலோர காவல் படையினர் மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் சிக்னல் கிடைக்காததால் மீனவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

Night
Day