பட்ஜெட்டில் 1% நீதித்துறைக்கு ஒதுக்க வேண்டும்" : தலைமை நீதிபதி வலியுறுத்தல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழக அரசு தனது பட்ஜெட்டில் ஒரு சதவீதத்தையாவது நீதித்துறைக்கு ஒதுக்க முயற்சிக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கங்கா பூர்வாலா வேண்டுகோள் விடுத்துள்ளார். 

புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் புதிய முனிசிப் நீதிமன்ற கட்டடத்தை திறந்து வைத்து உரையாற்றிய அவர், தமிழக அரசு தனது பட்ஜெட்டில் ஒரு சதவீதத்தையாவது நீதித்துறைக்கு ஒதுக்குவதற்கு முயற்சிக்க வேண்டும் என தெரிவித்தார். மேலும், நிதி பற்றாக்குறையால் ஏழைகள் நீதிமன்றம் வருவதை தவிர்க்கின்றனர், அவர்களுக்காகவது வழக்கறிஞர்கள் சமரச தீர்வு மையத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

varient
Night
Day