பட்டாசு குடோன் வெடிவிபத்து : குடோன் உரிமையாளர் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சேலம் அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்ததை தொடர்ந்து குடோன் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

அயோத்தியாபட்டணம் அருகே வெள்ளையம்பட்டியில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் நேற்று காலை வெடி விபத்து ஏற்பட்டது. இதில் சிவகாசியை சேர்ந்த ஜெயராமன் என்பவர் உயிரிழந்தார். மேலும் படுகாயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் பட்டாசு குடோன் நடத்தி வந்த சேலம் சுக்கம்பட்டியை சேர்ந்த ஜெயக்குமார் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

varient
Night
Day