பராமரிப்பு காரணமாக சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே 44 மின்சார ரயில்கள் நாளை ரத்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை கடற்கரை - தாம்பரம் வழித்தடத்தில் இயக்கப்படும் 44 மின்சார ரயில்கள் நாளை முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. போக்குவரத்தை விட மின்சார ரயில்களில் தினசரி லட்சக்கணக்கானோர் மின்சார ரயில்களை பயன்ப்படுத்தி வருகின்றனர். கடந்த சில வாரங்களாக வார இறுதியில் மின்சார ரயில்களை பாராமரிப்பு பணிகள் என காரணம் காட்டி ரயில்கள் ரத்து செய்யப்படுவது பயணிகள் இடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. கோடம்பாக்கம்- தாம்பரம் ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், நாளை சென்னை கடற்கரை - தாம்பரம் வழித்தடத்தில் இயக்கப்படும் 44 மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Night
Day