பராமரிப்பு பணி காரணமாக நாளை 6 ரயில்கள் ரத்து : திருச்சி ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பராமரிப்பு பணி காரணமாக நாளை 6 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக 
திருச்சி ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. 

விழுப்புரம் - திருச்சி இடையே ஈச்சங்காடு, மாத்தூர் பகுதிகளில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால், விருதாச்சலம் - திருச்சி, திருப்பாதிரிப்புலியூர் - திருச்சி மற்றும் நெல்லையில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் வந்தே பாரத் உள்ளிட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதேபோன்று எழும்பூர்- நெல்லை வந்தே பாரத் ரயில், திண்டுக்கல் - விழுப்புரம் வழியாக இருமார்க்கத்திலும் இயக்கப்படும் முன்பதிவில்லா வண்டி உள்ளிட்ட 6 ரயில்கள் நாளை ரத்து செய்யப்பட்டுள்ளதாக திருச்சி ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. 

Night
Day