பள்ளி அருகே புகையிலை விற்பனை - அறிக்கை தர உத்தரவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை மாநகராட்சி பள்ளியைச் சுற்றி புகையிலை பொருட்கள் விற்கப்படுவது குறித்து தமிழக அரசு அறிக்கையளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வியாசர்பாடி அருகே கல்யாணபுரத்தில் செயல்பட்டு வரும் மாநகராட்சி பள்ளியில், குடிநீர், கழிப்பிட வசதிகள் இல்லாதது குறித்தும், பள்ளியைச் சுற்றி புகையிலைப் பொருட்கள் விற்கப்படுவது குறித்தும் ஆங்கில நாளிதழில் செய்தி வெளியானது. அதன் அடிப்படையில், சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. இவ்வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் - நீதிபதி பாலாஜி அமர்வு, இதுகுறித்து தமிழக அரசு, காவல்துறை மற்றும் சென்னை மாநகராட்சி, 2 வாரத்தில் பதிலளிக்கவும், அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.

Night
Day