பள்ளி மாணவிகளை கிண்டல் செய்த கஞ்சா போதை இளைஞர்கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை அடுத்த காட்டுப்பாக்கத்தில் கஞ்சா போதையில் பள்ளி மாணவிகளை, இளைஞர்கள் வழி மறித்து கிண்டல் செய்த கஞ்சா பாய்ஸின் வீடியோ சமூக வலைதளங்களில் வரலாகி வருகிறது. சென்னை போரூர் அடுத்த கட்டுப்பாக்கம் இந்திராணி நகர் பகுதியில் சாலையில் சென்ற பள்ளி மாணவிகளை தடுத்து நிறுத்தி இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்கள்  நீண்டநேரமாக வம்பு இழுத்து பேசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்து போலீசார் அந்த பகுதிக்கு வந்த நிலையில் காவல்துறையினரை கண்டு சிறிதும் அச்சமடையாத அருண்குமார் என்ற இளைஞர் அங்குள்ள கம்பத்தின் மீதி தலையால் மோதி தனது வீரத்தை வெளிப்படுத்தினார். இதனையடுத்து அவரது கை,கால்களை கட்டி காவல்துறையினர் தூக்கி சென்றனர். 

Night
Day