பழநியில் ஜூலை 13-ஆம் தேதி கவனஈர்ப்பு கடையடைப்பு போராட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திண்டுக்கல் மாவட்டம் பழனி கோயில் நிர்வாகத்தை கண்டித்து ஜூலை 13-ஆம் தேதி கவன ஈர்ப்பு கடையடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவின்படி பழனி மலையடிவாரத்தில் இருந்த 150-க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு வீடுகளும், கடைகளும் அகற்றப்பட்டது. இதனால் ஆயிரக்கணக்கான சிறு-குறு வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கான மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டுமென நகராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் கோயில் நிர்வாகத்தைக் கண்டித்து நகர்மன்றம் சார்பில் ஜூலை 13-ஆம் தேதி அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Night
Day