பழநி நீதிமன்ற அலுவலக பெண் உதவியாளரின் மகன் நீதிபதி தேர்வில் வெற்றி - தாய் மகிழ்ச்சி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பழநியில் நீதிமன்றத்தில் வேலை செய்யும் அலுவலக பெண் உதவியாளரின் மகன் சிவில் நீதிபதியாக தேர்வானது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழநியை சேர்ந்த ஜெயலட்சுமி, நீதிமன்ற உதவியாளராக கடந்த 15 வருடங்களுக்கு மேலாக பணிபுரிந்து வருகிறார்.  இவரது மகன், சக்தி நாராயணமூர்த்தி சென்னையில் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் இளநிலை சட்டப் படிப்பை முடித்து பின்பு பழநியில் பயிற்சி வழக்கறிஞராக பணிபுரிந்து வந்தார். இந்தநிலையில், சிவில் நீதிபதி தேர்வுக்கு பயிற்சி எடுத்து வந்த சக்தி நாராயணமூர்த்தி, சிவில் நீதிபதி தேர்வு எழுதி வெற்றி பெற்றுள்ளார். 

Night
Day