பழவூர் பகுதியில் அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு ஆரத்தி எடுத்து பெண்கள் உற்சாக வரவேற்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

ராதாபுரம் சட்டமன்ற தொகுதி, பழவூர் கிராம பஞ்சாயத்திற்கு உட்பட்ட பழவூர் பகுதிக்கு வருகை தந்த புரட்சித்தாய் சின்னம்மாவுக்‍கு கழக நிர்வாகிகளும், தொண்டர்களும், பொதுமக்‍களும் பட்டாசுகள் வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். பெண்கள் ஆரத்தி எடுத்து, சின்னம்மாவுக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.


பழவூர் பகுதியில் நிலவும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து, அங்கு கூடியிருந்த பொதுமக்‍கள் புரட்சித்தாய் சின்னம்மாவிடம் தெரிவித்தனர். அவற்றை கனிவுடன் கேட்டறிந்த புரட்சித்தாய் சின்னம்மா, 2026ம் ஆண்டு அம்மாவின் ஆட்சி அமைந்தவுடன் மக்‍கள் பிரச்சனைகள் தீர்க்‍கப்படும் என்று உறுதி அளித்தார். 

அங்கிருந்த குழந்தைகள் மற்றும் சிறுவர், சிறுமியருக்‍கு புரட்சித்தாய் சின்னம்மா சாக்லேட்டுகள் வழங்கி மகிழ்ச்சி தெரிவித்தார்.

Night
Day