பாம்பன் தூக்குபாலம் திறப்பு - விசைப்படகுகள் கடந்து செல்வதை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் ரயில் தூக்குபாலம் திறக்கப்பட்டு நூற்றுக்கணக்கான விசைப்படகுகள் ஒன்றன் பின் ஒன்றாக சென்ற காட்சியை சுற்றுலாப யணிகள் கண்டு ரசித்தனர். தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்ததையடுத்து, பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலத்தில் இருந்து நூற்றுக்கணக்கான விசைப்படகுகள் கரை திரும்பின. இதனையொட்டி பாம்பன் ரயில் தூக்கு பாலம் திறக்கப்பட்டு வடக்குப் பகுதியிலிருந்து தெற்கு பகுதியை நோக்கியும், தெற்கு பகுதியிலிருந்து வடக்கு பகுதியை நோக்கியும் ஒன்றன் பின் ஒன்றாக நீண்ட வரிசையில் விசைப் படகுகள் அணி வகுத்து சென்றன. இதனை, பாம்பன் சாலை பாலத்திலிருந்து கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள், புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தனர்.

Night
Day