பாம்பன் பாலத்தில் சேதமடைந்த சாலையை சீர்செய்ய வாகன ஓட்டிகள் கோரிக்கை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தில் சேதமடைந்த சாலையை சீர் செய்ய வேண்டுமென தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மண்டபம் - ராமேஸ்வரம் தீவை இணைக்க கூடிய கடல் வழி பாம்பன் சாலை பாலம் திறக்கப்பட்டு 36 ஆண்டு ஆகிறது. இந்நிலையில் மராமத்து பணிகளை அடிக்கடி மத்திய அரசு செய்து வந்தாலும் பாலத்தை இணைக்கக்கூடிய ஸ்பிரிங் போல்டுகள் தேய்மானம் அடைந்து அவ்வப்போது விபத்துக்கள் ஏற்படுகிறது. இந்நிலையில், பாம்பன் பாலத்தின் ஸ்பிரிங் போல்டுகள் சேதமடைந்துள்ளதால் அவ்வழியாக செல்லும் சுற்றுலாப் பயணிகள் அச்சத்துடன் பயணித்து வருகின்றனர். எனவே, உடனடியாக சாலையை சீர் செய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.

Night
Day