பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய வீரர்களுக்கு அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வாழ்த்து

எழுத்தின் அளவு: அ+ அ-

பாரிஸிஸ் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் தொடரில் வெண்கலம் வென்ற தமிழக வீரர் மாரியம்மன் தங்கவேலுக்கும், பதக்கம் வென்ற இந்திய வீரர்கள், வீராங்கனைக்கும் அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வாழ்த்து தெரிவித்துள்ளார். 

அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் பாரிஸில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி ஏற்கனவே 3 தங்கம் உள்பட 15 பதக்கங்களை வென்றுள்ள நிலையில் இந்திய வீரர், வீராங்கனைகள், நேற்று நடைபெற்ற போட்டிகளில் மேலும் 5 பதக்கங்களை வென்றிருப்பது மிகவும் மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் அளிப்பதாக தெரிவித்துள்ளார். 

ஆடவருக்கான உயரம் தாண்டுதல் T63 போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த இந்திய வீரர் மாரியப்பன் தங்கவேலு வெண்கலப் பதக்கம் வென்றுள்ளதற்கு தனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாகவும், இதன்மூலம் மாரியப்பன் தங்கவேலு தொடர்ந்து 3 பாரா ஒலிம்பிக் போட்டியிலும் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை தமிழகத்திற்கு பெற்று தந்துள்ளது மிகவும் பெருமையளிப்பதாகவும் புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.  இதே போட்டியில் இந்திய வீரர் சரத்குமார் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளதற்கு தனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் புரட்சித்தாய் சின்னம்மா கூறியுள்ளார். 

மேலும், ஆண்களுக்கான ஈட்டி எறிதல் F46 போட்டியில் இந்திய வீரர்கள் அஜித் சிங் வெள்ளிப் பதக்கத்தையும், சுந்தர் சிங் வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளது மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

அதேபோன்று பெண்களுக்கான 400 மீட்டர் T20 ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீராங்கனை தீப்தி ஜீவன்ஜி வெண்கலப் பதக்கம் வென்றுள்ளதற்கு தனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக புரட்சித்தாய் சின்னம்மா கூறியுள்ளார்.

பாரிஸில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் போட்டியில் இதுவரை 3 தங்கம், 7 வெள்ளி, 10 வெண்கலம் உட்பட 20 பதக்கங்களை வென்று பதக்கப்பட்டியலில் இந்தியா 19வது இடத்திற்கு முன்னேறி இருப்பது மிகவும் மகிழ்ச்சியளிப்பதாகவும், பாரா ஒலிம்பிக் போட்டியில் முதன் முறையாக 20 பதக்கங்களை இந்தியாவிற்கு பெற்று தந்து பெருமை சேர்த்துள்ள அனைத்து வீராங்கனைகளுக்கும், வீரர்களுக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்வதாகவும் அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.


Night
Day