பிரதமர் நரேந்திர மோடி வருகை - சென்னையில் ஐந்தடுக்கு பாதுகாப்பு - 15,000 போலீசார் குவிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பிரதமர் மோடியின் வருகையையொட்டி, சென்னையில் டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் உத்தரவை மீறும் நபர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல்துறை சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் வருகை காரணமாக, பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர்கள், கமாண்டோ உளிட்ட 15 ஆயிரம் காவலர்கள் 5 அடுக்கு பாதுகாப்பிலும் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும் சென்னை விமான நிலையம் உள்ளிட்ட இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. லாட்ஜூகள், தங்கும் விடுதிகள், நட்சத்திர ஓட்டல்கள் உள்ளிட்ட இடங்களிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. 

Night
Day