பிரதமர் வருகை - 5 அடுக்கு பாதுகாப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரச்சாரத்திற்காக இன்று தமிழகம் வருகிறார். முதல்கட்ட மக்களவைத் தேர்தல் நடைபெறும் தமிழ்நாட்டில், நாளை மறுநாள் மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைய உள்ளதால் அரசியல் கட்சிகளின் பிரச்சாரங்கள் உச்சகட்டத்தை எட்டியுள்ளன. அந்த வகையில் தென்மாவட்டங்களான நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி , தூத்துக்குடி மாவட்ட பாஜக மற்றும் அதன் கூடடணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக பிரதமர் மோடி இன்று மீண்டும் தமிழகம் வருகிறார். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள அகஸ்தியா்பட்டியில் மாலையில் நடைபெறவுள்ள தோ்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார். பிரதமர் வருகையையொட்டி அம்பாசமுத்திரத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Night
Day