பிராட்வேயில் சாலையில் மழைநீர் தேக்கம் - வாகன ஓட்டிகள் கடும் அவதி

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை பிராட்வேயில் உள்ள பிரகாசம் சாலையில் மழைநீர் தேங்கியுள்ளதால் வாகனங்களை ஓட்டி செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். குப்பை கழிவுகளுடன் தேங்கிய மழைநீரில் செல்லும் வாகன ஓட்டிகள், வடிகால்வாய் பணிகள் மந்தமாக நடைபெறுவதாகவும், மழைநீரை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளனர். குளம் போல் தேங்கியுள்ள மழைநீரில், கழிவுநீரும் கலப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். 

Night
Day