பிளாஸ்டிக் அட்டையை பயன்படுத்தி ஏடிஎம்-மில் கொள்ளை!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் தனியார் ஏடிஎம்-ல் பிளாஸ்டிக் அட்டையை பயன்படுத்தி பணம் திருடிய வடமாநில சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

ஆவடி வீட்டு வசதி வாரிய பகுதியில் உள்ள எஸ்பிஐ வங்கி ஏடிஎம்-ல் நேற்றிரவு நூதன முறையில் பிளாஸ்டிக் அட்டையை பயன்படுத்தி வடமாநில சிறுவன் ஒரு லட்சம் ரூபாய்வரை பணத்தை திருடியுள்ளான். இதனை நேரில் பார்த்த பொதுமக்கள் சிறுவனை பிடித்து ஆவடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். அப்போது நடைபெற்ற விசாரணையில், சிறுவனிடம் ஏடிஎம்-மின் சாவி இருந்தது தெரிந்தது. இதையடுத்து சிறுவனின் கைக்கு ஏடிஎம் சாவி எப்படி வந்தது? , வங்கி ஊழியர்கள் யாரும் சிறுவனுடன் தொடர்பில் உள்ளார்களா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Night
Day