பி-எட் தேர்வு வினாத்தாள் கசிவு- மாணவர்கள் அதிர்ச்சி

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் பி.எட். எனப்படும் இளநிலை கல்வியியல் படிப்புக்கான நான்காம் பருவ தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தேர்வு தொடங்குவதற்கு முன் இணையதளம் வாயிலாக புதிய வினாத்தாள், தேர்வு மையங்களுக்கு அனுப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல்த்துறை பல்கலைக்கழகத்தின் பி.எட். 2ம் ஆண்டு 4ம் பருவ தேர்வு கடந்த 27 ஆம் தேதி தொடங்கியது. இதுவரை 2 தேர்வுகள் நடைபெற்ற நிலையில், இன்று படைப்பு திறனும் உள்ளடக்க கல்வியும் என்ற தேர்வு நடைபெறுகிறது. இத்தேர்வுக்கான வினாத்தாள் நேற்றே கசிந்தது கல்வியாளர்களை அதிர்ச்சியடைய வைத்தது. இதுபோன்று முறைகேடாக முன்கூட்டியே தேர்வர்களிடம் வினாத்தாள் கிடைத்து விடுவதாகவும், B.Ed. பயிலும் மாணவர்களுக்கான பருவத்தேர்வு முறையாக நடத்தப்படுவதில்லை என்றும் கல்வியாளர்கள் குற்றம்சாட்டினர்.

இந்நிலையில், முன்கூட்டியே வெளியான படைப்பு திறனும் உள்ளடக்க கல்வியும் தேர்வுக்கான வினாத்தாளை திரும்ப பெறுவதாக தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் துறை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. தேர்வு தொடங்குவதற்கு முன் இணையதளம் வாயிலாக புதிய வினாத்தாள், தேர்வு மையங்களுக்கு அனுப்பப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு தொடங்குவதற்கு முன்பாக  வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்து அதை மாணவர்களுக்கு நகல் எடுத்து கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Night
Day