புதிய உச்சத்தை தொட்ட ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.55,840-க்கு விற்பனை

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு விற்பனையாகி வருகிறது. அந்த வகையில், கடந்த ஜூலை மாதம் பட்ஜெட்டில் தங்கத்தின் இறக்குமதி மீதான வரி குறைக்கப்பட்டதால் சவரன் 2 ஆயிரத்து 200 ரூபாய் வரை குறைந்தது. ஆனால், தங்கம் விலை மீண்டும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது . நாளுக்கு நாள் தங்கத்தின் விலை அதிகரித்து வரும் நிலையில் ஒரு கிராம் தங்கம் விலை 7 ஆயிரம் ரூபாயை நெருங்கியுள்ளது. இன்று சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் 55 ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இன்னும் 20 ரூபாய் உயர்ந்தால் ஒரு கிராம் தங்கம் 7 ஆயிரம் ரூபாயை எட்டி விடும் என்பதால் நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Night
Day