புதுக்கோட்டை: கிணற்றுப்பாசனம் உள்ள வயல்களில் நடவு பணிகள் தீவிரம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை, அன்னவாசல் வட்டாரங்களில் போதிய நீர் ஆதாரம் உள்ள விளை நிலங்களில் தற்போது நவரை பருவ நெல் நடவு பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். விராலிமலை, அன்னவாசல் பகுதிகளில் பல ஹெக்டேர் அளவில் விவசாய நிலங்கள் உள்ளன. இருப்பினும் பெரும்பாலான வயல்கள் குளத்து பாசனம், ஏரி பாசனத்தை நம்பியே உள்ளன. இருப்பினும் சில வயல்களில் இருக்கும் கிணறுகளில் உள்ள நீரை ஆதாரமாக கொண்டு குறுவை சாகுபடி செய்யும் வகையில் நெல் நடவு பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது செய்யப்படும் நடவில் பயிர்கள் நன்கு வளர்ந்து மே மாதம் அறுவடைக்கு தயாராகும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Night
Day