புதுக்கோட்டை அருகே களைகட்டிய மாட்டுவண்டி பந்தயம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே அய்யனார் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் வெகு விமரிசையாக நடைபெற்றது. ஈழக்குடிபட்டி பகுதியில் உள்ள ஸ்ரீ உய்யவந்தி அய்யனார் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதையொட்டி அப்பகுதியில் மாட்டுவண்டி பந்தயம் நடத்தப்பட்டது. இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 32 ஜோடி மாட்டு வண்டிகள் பங்கேற்றன. துள்ளி குதித்து சீறி பாய்ந்த காளைகளை சாலையின் இருபுறமும் நின்று கண்டு ரசித்த பொதுமக்கள், கைதட்டி ஆரவாரம் செய்தனர். போட்டியில் வெற்றி பெற்ற மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கும், அதன் சாரதிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. 

Night
Day