தமிழகம்
செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி
ஜாமீன் வேண்டுமா அல்லது அமைச்சர் பதவி வேண்டுமா என்பதை திங்கள் கிழமைக்குள்...
புதுக்கோட்டை மாவட்டம் நெடுங்குடி அருகே உள்ள மனோன்மணி அம்மன் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. அம்பாள்புரத்தில் உள்ள மமோன்மணி அம்மன் கோயிலில் பங்குனித் திருவிழா நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு பெரிய மாடு, சிறிய மாடு என இரு பிரிவுகளில் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இதில் சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 31 ஜோடி மாட்டு வண்டிகள் பங்கேற்றன. பெரிய மாட்டு வண்டிகளுக்கு 8 மைல் தூரம் எல்கையாகவும், சிறிய மாட்டு வண்டிகளுக்கு 6 மைல் தூரம் எல்கையாகவும் நிர்ணயிக்கப்பட்டது. பந்தயம் தொடங்கியுடன் சாலையில் சீறிப்பாய்ந்த மாட்டு வண்டிகளை இருபுறமும் நின்ற பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
ஜாமீன் வேண்டுமா அல்லது அமைச்சர் பதவி வேண்டுமா என்பதை திங்கள் கிழமைக்குள்...
சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயன்ற ஆட்டோ ஓட்டுநர்களை போலீசார் க...